Kathir News
Begin typing your search above and press return to search.

கடவுள்தான் என்னை காப்பாற்றினார் - துரைமுருகன் புலம்பலின் பின்னணி!

கடவுள்தான் என்னை காப்பாற்றினார் - துரைமுருகன் புலம்பலின் பின்னணி!

Mohan RajBy : Mohan Raj

  |  27 July 2021 8:35 AM GMT

"இறைவன் அருளால் நான் வெற்றி பெற்று விட்டேன்" என கடவுள் மறுப்பை ஒருகாலத்தில் பேசி கட்சியை வளர்த்த தி.மு.க அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

காட்பாடி ஒன்றிய தி.மு.க மேற்கு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொன்னையில் நடைபெற்றது. இதில் காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ'வும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில் கூறியதாவது, "நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கோட்டையாக கருதப்படும் பொன்னை, மேல்பாடி, காட்பாடி யூனியன் உள்ளிட்ட பல பூத்துக்களில் திமுகவுக்கு குறைவாகவே ஓட்டுக்கள் கிடைத்தது.

காட்பாடி யூனியன் கிராமங்களில் பெரும்பாலான பூத்களில் ஓட்டு எண்ணும்போது நாம் பின் தங்கிதான் இருந்தோம். நமது தி.மு.க நிர்வாகிகளே எனக்கு உள்ளடி வேலைகள் செய்தார்கள் என்பது எனக்கு தெரியும். அப்படி யாரெல்லாம் உள்ளடி வேலைகள் செய்தார்களோ அவர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. என்னை தோற்கடிக்க வேண்டும் என நினைத்தார்கள்.

ஆனால் இறைவன் அருளால் நான் வெற்றி பெற்று விட்டேன். இப்போது அவர்களுக்கும் நான்தான் அமைச்சர். மறப்போம்.. மன்னிப்போம்.. என அண்ணாதுரை சொன்னதை நினைத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் நிர்வாகிகள் இரட்டிப்பாக வேலை செய்ய வேண்டும். தி.மு.க அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறாவிட்டால் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாராபட்சமின்றி அடியோடு தி.மு.க'வில் இருந்து அவர்களை உடனடியாக நீக்கிவிடுவேன்" என தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News