Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.கவினர் குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது போலீசில் புகார்!

தி.மு.கவினர் குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது போலீசில் புகார்!

Mohan RajBy : Mohan Raj

  |  10 Aug 2021 1:00 AM GMT

நெல்லை கண்ணன் தி.மு.க குறித்தும், அந்தக் கட்சியின் சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் பற்றியும் அவதூறாகப் பேசியதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6'ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யாவின் நூற்றாண்டு விழாக் கூட்டம் நெல்லையில் நடந்தது. அதில் பேசிய நெல்லை கண்ணன், தி.மு.க குறித்தும், தி.மு.க'வின் நெல்லை மாநகரச் செயலாளரான ஏ.எல்.எஸ்.லட்சுமணன் குறித்தும் அவதூறாகப் பேசியதாக தி.மு.க சார்பில் புகார் அளித்துள்ளார் தி.மு.க மாநகர வழக்கறிஞரணி அமைப்பாளர் உமாமகேஸ்வரன்.

தி.மு.க வழக்கறிஞர்கள் அளித்துள்ள இந்த மனு காரணமாக நெல்லை கண்ணன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருகிறார்.

Source - ஜூனியர் விகடன்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News