Kathir News
Begin typing your search above and press return to search.

மாணவர்களின் உயிரிழப்பை தடுப்பதற்கு தி.மு.க அமைதியாக இருந்தாலேபோதும் ! - அண்ணாமலை !

மாணவர்களின் உயிரிழப்பை தடுப்பதற்கு தி.மு.க அமைதியாக இருந்தாலேபோதும் ! - அண்ணாமலை !

Mohan RajBy : Mohan Raj

  |  30 Sep 2021 6:45 AM GMT

"மாணவர்களின் உயிரிழப்பை தடுப்பதற்கு தி.மு.க அமைதியாக இருந்தாலேபோதும்" என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நீட்' தேர்வு சமூகநீதியை நிலைநாட்டக் கூடியது. மன அழுத்தத்தால் மாணவர்கள் உயிர்இழந்து வரும் நிலையில், தமிழக அரசு அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் 'நீட்' தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக அரசியல் செய்து வருகிறது. மாணவர்களின் உயிரிழப்பை தடுப்பதற்கு தி.மு.க அமைதியாக இருந்தாலேபோதும். தேர்தல் வரும்போதெல்லாம் 'நீட்' தேர்வு தொடர்பாக பேசி தி.மு.க ஆதாயம் தேடிக் கொள்கிறது. 'நீட்' தேர்வை பெற்றோர், மாணவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். இதை எதிர்ப்பவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகள் வைத்துள்ள தி.மு.க'வினர்தான்" என்றார் அவர்.

மேலும் பேசிய அண்ணாமலை, "அதிமுக, பாஜக கூட்டணி ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறும்" என்றார்.


Source - The hindhu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News