Kathir News
Begin typing your search above and press return to search.

நேதாஜியையும், படேலையும் திட்டமிட்டே மறைக்க சதிகள் நடந்தன - கொந்தளித்த அமித்ஷா !

நேதாஜியையும், படேலையும் திட்டமிட்டே மறைக்க சதிகள் நடந்தன - கொந்தளித்த அமித்ஷா !

Mohan RajBy : Mohan Raj

  |  17 Oct 2021 5:30 AM GMT

"நேதாஜியோ அல்லது விடுதலைக்கு பின் நாட்டை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேலோ பல ஆண்டுகளாக உரிய அங்கீகாரமோ, மரியாதையோ, முக்கியத்துவமோ பெறவில்லை" என அமித்ஷா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்தமானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் போர்ட்பிளேரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, "தேசப்பற்று மிக்க விடுதலை போராட்ட வீரர்களுக்கு, இந்த தீவுகள் முக்கிய இடமாக விளங்கி இருக்கின்றன. ஏனெனில் 1943'ல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இங்கேதான் மூவர்ண கொடியை முதன் முதலாக ஏற்றினார். அத்துடன் 1945 வரை 2 ஆண்டுகளுக்கு ஆங்கிலேய அரசிடம் இருந்து இந்த மண்ணை பாதுகாத்தார்.

ஆனாலும், நேதாஜியோ அல்லது விடுதலைக்கு பின் நாட்டை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேலோ பல ஆண்டுகளாக உரிய அங்கீகாரமோ, மரியாதையோ, முக்கியத்துவமோ பெறவில்லை. புகழ்பெற்ற சில விடுதலை போராட்ட வீரர்களையும், அவர்களது பங்களிப்பையும் வேண்டுமென்றே சிறுமைப்படுத்தும் முயற்சிகள் நடந்தன.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜனதா அரசு, குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை நிறுவியதுடன், நேதாஜியின் பிறந்த தினத்தை 'வெற்றி தினம்' ஆகவும் அறிவித்தது" என அமித்ஷா பேசினார்.



Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News