இன்னும் பல வருஷத்துக்கு பா.ஜ.க அசைக்க முடியாது - ஒப்புக்கொண்ட பிரஷாந்த் கிஷோர் !
By : Mohan Raj
"ராகுலல் மோடிக்கு போட்டி கூட குடுக்க இயலாது" என பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்ந் கிஷோர் தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் வியூகங்களை வகுத்து வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காக கோவா சென்ற அவர், செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "இந்திய அரசியலின் மையப் புள்ளியாக பா.ஜ.க விளங்கும் என்றும், பா.ஜ.க வெற்றி பெற்றாலும் சரி தோல்வியடைந்தாலும் சரி, அடுத்த பல ஆண்டுகளுக்கு அந்த கட்சி இந்திய அரசியலின் மையப் புள்ளியாக இருக்கப் போகிறது என்றும் கூறினார்.
'சுதந்திரத்துக்கு பின்னர் தொடக்க காலங்களில் இந்திய அரசியலில் 40 ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் மையப் புள்ளியாக இருந்தது போல பா.ஜ.க பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். தேசிய அளவில் 30 சதவீதத்துக்கு கூடுதலான வாக்கு வங்கியை பெற்ற பின்னர் பா.ஜ.க அவ்வளவு சுலபமாக சுருங்கிவிடாது. இதை உணர்ந்துகொள்ளாமல் இருப்பதுதான் ராகுல் காந்தியின் பிரச்சினை.
மக்கள் மோடியை அவ்வளவு சுலபமாக தூக்கி எறிந்து விடுவார்கள் என ராகுல் காந்தி கருதுகிறார். அப்படி நடக்கப்போவதில்லை. பிரதமர் மோடியின் பலம் குறித்து ஆராய்ந்து, புரிந்துகொண்டு, அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உங்களால் (ராகுல்) மோடிக்கு போட்டியை கூட கொடுக்க முடியாது' என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.