Kathir News
Begin typing your search above and press return to search.

சிறுவாச்சூரில் மீண்டும் சாமி சிலைகள் உடைப்பு - மர்மநபர்கள் அட்டகாசம் !

சிறுவாச்சூரில் மீண்டும் சாமி சிலைகள் உடைப்பு - மர்மநபர்கள் அட்டகாசம் !

Mohan RajBy : Mohan Raj

  |  29 Oct 2021 2:30 AM GMT

சிறுவாச்சூரில் மீண்டும் மர்மநபர்கள் சாமி சிலைகளை உடைத்து அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளனர்.





பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் மிகவும் பிரசித்திபெற்ற மதுர காளியம்மன் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலின் துணைக் கோயில்களான பெரியசாமி, செங்கமலையார் கோயில்கள் மலையில் அமைந்திருக்கின்றன. கடந்த 5-ம் தேதி பெரியசாமி கோயிலில் 5-க்கும் மேற்பட்ட சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், பக்தர்கள் ஆவேசமடைந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீஸார் விசாரணையில், சிறுவாச்சூர் பெரியாண்டவர் கோயில் சிலைகளை உடைத்ததும் நாதன்தான் என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.





இந்த நிலையில், மீண்டும் 8-ம் தேதி செங்கமலையார் கோயிலில் 16 அடி உயரமுள்ள செங்கமலையார் சாமி சிலை, 5 அடி உயரமுள்ள சித்தர்கள் சிலை, 5 அடி உயரமுள்ள கொரப்புலியான் சிலை, குதிரை, காளை, வேட்டை நாய் உட்பட 10-க்கும் மேற்பட்ட சிலைகள் மர்மநபர்களால் உடைக்கப்பட்டன. இவ்வாறு தொடர்ந்து சாமி சிலைகள் அந்த பகுதியில் உடைக்கப்படுவதால் மக்கள் மிகுந்து கொதிப்படைந்துள்ளனர்.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News