Kathir News
Begin typing your search above and press return to search.

நீட் தேர்வில் வென்ற மலைவாழ் மாணவி - நீட் பற்றிய பொய் பிரச்சாரங்களை தவிடுபொடியாக்கினார் !

நீட் தேர்வில் வென்ற மலைவாழ் மாணவி - நீட் பற்றிய பொய் பிரச்சாரங்களை தவிடுபொடியாக்கினார் !

Mohan RajBy : Mohan Raj

  |  3 Nov 2021 9:30 AM GMT

தமிழகம் முழுவதும் பிரதான கட்சிகள் நீட் தேர்வை தவறாக பிரச்சாரம் மூலம் அம்பலப்படுத்தி வரும் வேளையில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

நீட் தேர்வு கூடாது, நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது, நீட் தேர்வு கொடியது, நீட் தேர்வை நம் மாணவர்களால் எதிர்கொள்ள இயலாது என பொய்பிரச்சாரங்களை தமிழக பிரதான கட்சிகள் முன்னெடுத்து வரும் வேளையில் சத்தமில்லாமல் பழங்குடி மாணவி ஒருவர் நீட் தேர்வில் வெற்றி வாகை சூடியிருக்கிறார்.

நீட் தேர்வில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். அந்த மாணவியின் பெயர் சங்கவி, மதுக்கரை அருகே உள்ள எம்.நஞ்சப்பனூர் என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை முனியப்பன் இறந்து விட்டார். தாயார் வசந்தாமணி கண் பார்வை குறைபாடுள்ளவர். ஏழ்மையில் வாழ்ந்த மாணவி சங்கவி தனது விடாமுயற்சியால் வறுமையை வென்று சாதித்துள்ளார்.


நீட் தேர்வில் இவர் 720 மதிப்பெண்களுக்கு 202 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பழங்குடியின மாணவியான இவர் 108 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தகுதி பெற்று விடுவார். தற்போது 202 மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் நிச்சயம் இவருக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்க இடம் கிடைத்து விடும்.


இது குறித்து பெருமை பொங்க மாணவி சங்கவி கூறிய வார்த்தைகள், "எனது குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்தாலும் படித்து முன்னேற வேண்டும் என்ற கனவு என்னுள் இருந்தது. இதன் காரணமாக குடும்ப கஷ்டத்தையும் உணர்ந்து உத்வேகத்துடன் படித்தேன். 10-ம் வகுப்பு வரை குமிதிபதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். 11 மற்றும் 12-ம் வகுப்புகள் பிச்சானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். பிளஸ்-2 தேர்வில் 925 மதிப்பெண்கள் பெற்றேன்.

முதலில் 2018-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் பங்கேற்று எழுதினேன். அதில் 96 மதிப்பெண்கள் பெற்றேன். அந்த சமயம் எனக்கு சாதி சான்றிதழே கிடைக்கவில்லை. இதனால் மேற்படிப்பு படிக்க முடியாமல் தவித்தேன்.

அதன்பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்ட எங்கள் கிராமத்துக்கு உதவி செய்ய சமூக ஆர்வலர்கள் பலர் வந்தனர். அவர்கள் எனது நிலையை அறிந்து சாதி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் எனது தாயாரின் கண் சிகிச்சைக்கும் உதவி செய்தனர். தொடர்ந்து நீட் தேர்வு எழுதவும் உதவி செய்தனர்" என குறிப்பிட்டுள்ளார்.


நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல்வாதிகள் முகத்தில் மலைவாழ் மாணவி சங்கவி "விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்" என நிரூபித்து கரியை பூசியுள்ளார்.


Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News