Kathir News
Begin typing your search above and press return to search.

விஜய் சேதுபதி மீதான தாக்குதல் மனிதாபிமானமற்றது - கண்டிப்புடன் கூறிய அண்ணாமலை !

விஜய் சேதுபதி மீதான தாக்குதல் மனிதாபிமானமற்றது - கண்டிப்புடன் கூறிய  அண்ணாமலை !

Mohan RajBy : Mohan Raj

  |  4 Nov 2021 5:00 AM GMT

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார்.

நேற்று தமிழ் திரையுலக நடிகர் விஜய் சேதுபதி பெங்களூரு விமான நிலையத்தில் வரும் பொழுது ரசிகர் ஒருவரால் தாக்கப்பட்டார். இந்தி வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. இது தொடர்பாக பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்த நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.





இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "பெங்களூர் விமான நிலையத்தில் இன்று, நடிகர் விஜய் சேதுபதி மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது மனிதாபிமானமற்ற இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்" என தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News