Kathir News
Begin typing your search above and press return to search.

"ஒரே நாளில் தண்ணீரை வடிய வைத்தோம்" - கே.என்.நேரு கூறிய பச்சை பொய்

ஒரே நாளில் தண்ணீரை வடிய வைத்தோம் - கே.என்.நேரு கூறிய பச்சை பொய்
X

Mohan RajBy : Mohan Raj

  |  18 Nov 2021 7:30 AM IST

"ஒரே நாளில் தண்ணீரை அகற்றினோம்" என ஒரு வாரம் மக்களை தண்ணீரில் தத்தளிக்கவிட்ட தி.மு.க அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு அப்பட்டமாக பொய் கூறியுள்ளார்.

கடந்த 6'ம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் மழை நீரில் தத்தளித்தார்கள். ஆளும் தி.மு.க அரசோ நிவாரண பொருள்கள் தருவது போல் புகைப்படங்கள் எடுப்பதிலும், ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்களை பரப்பவதிலும், எதிர்கட்சிகள் நிவாரண உதவிகள் செய்தால் அதனை கிண்டல் செய்வதிலும் மும்முரமாக செயல்பட்டது. மக்கள் ஒரு வார காலம் தண்ணீரில் தத்தளித்தார்கள், பெரும்பாலான இடங்களில் சாலை மறியலில் மக்கள் ஈடுபடும் அளவிற்கு கொந்தளிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஒரே நாளில் தண்ணீரை வடி வைத்தோம் என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அப்பட்டமாக பொய் கூறியுள்ளார். சேலத்தில் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் மழை அதிகமாக பெய்துள்ளது. சென்னை மாநகரம் பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்தது. சென்னையைப் போலவே பல்வேறு நகரங்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், அந்த பகுதிகளில் எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். ஆய்வு செய்தார்.

ஒரு சில இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் ஒரே நாளில் தண்ணீரை அகற்றினோம். பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டுகொண்டிருக்கிறது" என கூறியுள்ளார். இவ்வளவிற்கும் மழை வெள்ள சம்பவம் நடந்து 10 நாட்கள்தான் இருக்கும் அதற்குள் இப்படி அமைச்சரே பச்சையாக பொய் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் இருந்தும் ஒரே நாளில் தண்ணீரை வடிய வைத்தோம் எப பொய் கூறுவது தி.மு.க'வின் நிஜ முகத்தை காட்டுகிறது.


Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News