Kathir News
Begin typing your search above and press return to search.

புரிதல் இல்லாமல் அணை பாதுகாப்பு சட்டத்தை எதிர்க்கிறார்கள்: தி.மு.க. ம.தி.மு.க.வுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை !

நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்க மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்துள்ளது. சட்டம் குறித்த புரிதல் இல்லாமல், அரசியல் செய்வதற்காக திமுக, மதிமுக போன்ற கட்சிகள், இந்த சட்டத்தை எதிர்க்கின்றனர். உண்மையில் அணை பாதுகாப்பு சட்டம் சொல்வது என்ன? பார்ப்போம்.

புரிதல் இல்லாமல் அணை பாதுகாப்பு சட்டத்தை எதிர்க்கிறார்கள்: தி.மு.க. ம.தி.மு.க.வுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை !

ThangaveluBy : Thangavelu

  |  7 Dec 2021 2:22 PM GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உங்கள் அன்புக்கும், பாசத்திற்கும் உரிய சகோதரன் அண்ணாமலை எழுதுவது. நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்க மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்துள்ளது. சட்டம் குறித்த புரிதல் இல்லாமல், அரசியல் செய்வதற்காக திமுக, மதிமுக போன்ற கட்சிகள், இந்த சட்டத்தை எதிர்க்கின்றனர். உண்மையில் அணை பாதுகாப்பு சட்டம் சொல்வது என்ன? பார்ப்போம்.


காங்கிரஸ் தலைமையில் இருந்த மத்திய அரசின் அலட்சியத்தால் 34 ஆண்டு காலமாக அணை பாதுகாப்பு மசோதா கிடப்பில் போடப்பட்டது. நாட்டிலுள்ள அனைத்து அணைகளுக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பு வழிமுறைகளை முன்னெடுப்பதே இந்த மசோதாவின் நோக்கம். இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் வழங்கிய ஆய்வறிக்கையின்படி, 2008, 2016 வரையில் 17 மாநிலங்களில் 2 மாநிலங்களில் மட்டுமே அணைகளின் பாதுகாப்பு மசோதா மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அணை பாதுகாப்பு ஆணையம் மற்றும் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றை உருவாக்குவது கட்டாயமாக்கப்படும்.


1986 ஆம் ஆண்டின் அணை பாதுகாப்பு அறிக்கையில், அணைகளை பாதுகாக்க பொதுவான சட்டம் தேவை என பரிந்துரைக்கப்பட்டது. 2010ல் நீர்வள நிலைக்குழுவானது அணை பாதுகாப்பு மசோதா 2010 சட்டத்தை இயற்ற முன்வந்தது. அரசைப்புச் சட்டம் பிரிவு 252கீழ் அணை பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்ய ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் தாக்கல் செய்ய ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், 15வது மக்களவைக்கு பின் இந்த மசோதா காலாவதியானது. பின்னர், தேசிய ஜனாநாயக கூட்டணி அரசு நாடு முழுவதற்குமான அணை பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்தது.


2016ம் ஆண்டு மசோதா வரைவு செய்யப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது. தமிழ்நாடு மற்றும் கேரளாவை தவிரி பெரும்பாலான மாநிலங்கள் மசோதாவை ஏற்றுக்கொண்டன. தங்கள் மாநிலத்தில் ஏற்கனவே அணை பராமரிப்பு சட்டம் இருப்பதாக கேரளாவும், அணையின் உரிமை மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை முன்னிறுத்தி தமிழ்நாடும் இந்த சட்டத்தை எதிர்த்தன. 2017ல் 37வது தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் கூட்டத்தில், மாநில பிரதிநிதிகளின் பரிந்துரைபடி சட்ட மசோதாவில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்போது திமுக, மதிமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சட்டம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்கிற வாதத்தை முன்வைத்தனர். அவர்களுடைய வாதங்கள் மேம்போக்காக இருந்தது. எந்த ஒரு விதியையும் குறிப்பிட்டு தவறு என சுட்டிக்காட்ட முடியவில்லை. 1986 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, மத்திய அரசு அணைகளின் பாதுகாப்பு மற்றும் பொதுநலன் கருதி இந்த சட்டத்தை இயற்றும் என்று தெரிவிக்கப்பட்டது.

அணை பாதுகாப்பு மசோதாவின் முக்கிய அம்சங்கள்: ௧.நாட்டிலுள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. 2.மாநிலங்கள் தங்கள் அதிகார எல்லைக்குள், அணைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்ய ஒரு அமைப்பை நிறுவிக்கொள்ளலாம். 3.மாநில அரசுகள் நியமித்த உறுப்பினர்களை கொண்ட தேசிய அணைப் பாதுகாப்பு குழு நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்புக்காக ஒரே மாதிரியான வழிகாட்டுதல்களை உருவாக்கும். 4.தேசிய அணைப் பாதுகாப்பு குழுவில், 10 உறுப்பினர்களில் 7 உறுப்பினர்கள் மாநிலங்களின் பிரதிநிதிகளாக இருப்பார்கள். தற்போதைய அணை பாதுகாப்பு மசோதாவானது அணைப் பராமரிப்பில் மாநிலங்களின் பங்களிப்பு மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கிறது. எனவே இந்த சட்டம் மாநிலங்களுக்கு கூடுதல் பங்களிப்பை தருகின்றது.

அரசியலாக்கப்படும் மத்திய அரசின் மசோதாக்களின் நன்மைகளை பற்றியும் மத்திய அரசின் திட்டங்களை பற்றியும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது நம்முடைய கடமை, அதற்கு நான் எழுதும் இது போன்ற கடிதங்களில் வரும் விளக்கத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News