Kathir News
Begin typing your search above and press return to search.

நம்மை காட்டிலும் இந்த தேசம் மிகப்பெரியது, தேசத்திற்காக அர்ப்பணிக்க ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும்!- கிருஷ்ணசாமி!

நம்மை காட்டிலும் இந்த தேசம் மிகப்பெரியது எனவும், இந்த தேசத்திற்காக தம்மை அர்ப்பணிக்க ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

நம்மை காட்டிலும் இந்த தேசம் மிகப்பெரியது, தேசத்திற்காக அர்ப்பணிக்க ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும்!- கிருஷ்ணசாமி!

ThangaveluBy : Thangavelu

  |  12 Dec 2021 9:31 AM GMT

நம்மை காட்டிலும் இந்த தேசம் மிகப்பெரியது எனவும், இந்த தேசத்திற்காக தம்மை அர்ப்பணிக்க ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள், கமாண்டோக்கள் உட்பட 13 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்திய திருநாட்டை உலுக்கியது. இவர்கள் அனைவரும் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டனர்.


இந்நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் சக ராணுவ வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் அவர் பேசும்போது, நம்மை காட்டிலும் இந்திய தேசம் மிகப்பெரியது. இந்த தேசத்திற்காக அர்ப்பணிப்பதற்காக, நாம் ஒவ்வொருவரும் என்னெற்றும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News