காங்கிரஸ் கட்சி போலவே கொடியையும் தவறவிட்ட சோனியா காந்தி - அதிருப்தியில் காங்கிரஸார் !
By : Mohan Raj
காங்கிரஸ் கட்சியின் 137'வது ஆண்டுவிழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஏற்றிய காங்கிரஸ் கட்சின் கொடி ஏற்றும் போதே கீழே விழுந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பாக வலம் வருகிறது.
இன்று காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு விழா காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கொடியை ஏற்றுவதற்காக வந்தார். அப்போது சோனியா காந்தி கட்சியின் கொடியை ஏற்றும் போதே கொடி அறுந்து சோனியாவின் கைகளில் விழுந்தது.
இந்த சம்பவம் சுற்றியிருந்த காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் நிலைமையை சமாளிக்க அருகில் இருந்த காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் பவன் பன்சால் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் கொடியை தங்களது கைகளால் உயர்த்திக் காட்டினர்.
கொடியை ஏற்றும் போது விழுந்தது உணர்வு ரீதியாக காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது, இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரபரப்பாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியை போல கொடியையும் சோனியா தவறவிட்டுவிட்டார் என்பது போன்ற கமெண்டுகள் பரபரப்பாக வலம் வருகின்றன.