Kathir News
Begin typing your search above and press return to search.

மாநகராட்சி அனுமதி வாங்காமல் மதுரையில் தி.மு.க அலுவலகம் - முறையான அனுமதி ஏதுவும் இல்லை என பகீர் தகவல் !

மாநகராட்சி அனுமதி வாங்காமல் மதுரையில் தி.மு.க அலுவலகம் - முறையான அனுமதி ஏதுவும் இல்லை என பகீர் தகவல் !

Mohan RajBy : Mohan Raj

  |  28 Dec 2021 11:15 AM GMT

மதுரையில் மாநகராட்சி அனுமதியின்றி அத்துமீறி கட்டப்படும் தி.மு.க'வின் கட்சி அலுவகத்திற்கு 'சீல் வைக்கப்படும்' மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.



மதுரை பழங்காநத்தம் பைப்பாஸ் சாலையில் தி.மு.க கட்சி சார்பில் ஒரு கோடி மதிப்பீட்டில் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்கு மாநகராட்சி சார்பில் முறையாக அனுமதி அளிக்கவில்லை. ஆனால் தி.மு.க அலுவலகம் கட்டும் பணி விரைவாக நடந்து வருகிறது. இது குறித்து மூன்று முறை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியும் கண்டுகொள்ளாமல் கட்டுமானம் நடந்து வருகிறது.

இந்நிலையில் நான்காவது முறையாக இறுதியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "இனியும் கட்டுமானப்பணி தொடர்ந்தால் சீல் வைக்கப்படும்" என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அலுவர் ஒருவர் குறிப்பிடும்போது, "எங்களுக்கும் கட்டுமானத்திற்கும் சம்மந்தம் இல்லை என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் கட்டுமானம் தொடர்ந்தால் சீல் வைக்கப்படும் என எச்சரித்துள்ளோம்" என்றார்.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News