"நான் ஆளுங்கட்சி ஆளுய்யா" எஸ்.ஐ சீனிவாசனை மிரட்டிய தி.மு.க பிரமுகர் - தற்கொலை செய்யப்போவதாக பகீர் ஆடியோ !
By : Mohan Raj
ஆளும்கட்சியான தி.மு.க'வை சேர்ந்தவர்கள் தரும் அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்ற போவதாக வேலூர் மாவட்டத்தில் துணை ஆய்வளராக பணிபுரியும் சீனிவாசன் தன் குரல் மூலம் வாட்ஸ்அப் பதிவு அனுப்பிய விவகாரம் பரபரப்பாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில், வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணிபுரிபவர் சீனிவாசன், நேற்று இரவு 11 மணியளவில் சக காவலர்கள் வாட்ஸ்அப் குழுவில் ஒர் குரல் செய்தியை அனுப்பியிருந்தார். அதில், "நான் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் பணிபுரிகிறேன், எனது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டி.சி.குப்பத்தில் துளசி அம்மாள் என்பவர் பத்து லட்ச ரூபாய் சீட்டு பிடித்து பணம் கட்டியவர்களிடம் பணம் தராமல் இழுத்தடிக்கிறார். இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் நான் நடவடிக்கை எடுக்க முற்படும் போது டி.சி.குப்பத்தில் உள்ள ஆளும்கட்சியான தி.மு.க பிரமுகர் "நான் ஆளும்கட்சி ஆளுய்யா" என்னை மிட்டுகிறார்.
மேலும் பல தி.மு.க பிரமுகர்கள் என்னை மிரட்டுகின்றனர். நான் என்ன செய்ய முடியும், நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் எனக்கு சேர வேண்டிய பணத்தை அரசாங்கத்திடமிருந்து வாங்கி என் மனைவி, பிள்ளைகளிடத்தில் குடுத்துவிடுங்கள்" என கூறி அந்த வாட்ஸ்அப் பதிவு முடிவடைகிறது.
உடனே பதறிய சக அதிகாரிகள் இதனை தங்கள் உயர் அதிகாரிகளுக்கு உடனே தெரிவித்தனர். தன் வேலையை சரிவர செய்ய இயலாமல் ஆளும் கட்சியான தி.மு.க'வை சேர்ந்த ரவுடிகள் மிரட்டுகின்றனர் என காவல் துறை துணை ஆய்வாளர் ஒருவர் புகார் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.