"ஏன் தி.மு.க நிகழ்ச்சிக்கு கொரோனோ வராதா?" - கேள்வி எழுப்பிய சசிகலா!
By : Mohan Raj
எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சசிகலா'விற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தி.மு.க'வை விமர்சித்து சசிகரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த வாரம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் சசிகலா தன் ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டார். இதனைதொடர்ந்து கடந்த டிசம்பர் 23'ம் தேதி சென்னை மாநகர காவல்துறை சார்பில் ஒரு கடிதம் சசிகலாவிற்கு வந்தது. அதில், கொரோனோ பரவலை காரணம் காட்டி சசிகலாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே நாளன்று முதல்வர் ஸ்டாலினுக்கும், அவரது மகன் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கும் தடை ஏதும் இல்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்தது.
இதை குறிப்பிட்டு சசிகலா வெளியிட்ட அறிக்கையில், "காவல் துறைக்கு மதிப்பளித்து எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அலுவலகத்திலேயே அஞ்சலி செலுத்தினோம், ஆனால் கொரோனோ ஏன் முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகளுக்கும், அவர்களுடைய கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் பரவாதா?
தமிழக மக்கள் தி.மு.க'வை புறக்கணிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.