Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க.வில் இணைந்தவரை கொன்ற தி.மு.க. முன்னாள் கவுன்சிலர்! அண்ணாமலை கடும் கண்டனம்!

ஈரோடு மாவட்டம், அரச்சலூர் பகுதியில் வடிவேல் என்பவர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நிலையில், அவரை முன்னாள் திமுக கவுன்சிலர் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க.வில் இணைந்தவரை கொன்ற தி.மு.க. முன்னாள் கவுன்சிலர்! அண்ணாமலை கடும் கண்டனம்!

ThangaveluBy : Thangavelu

  |  31 Dec 2021 9:23 AM GMT

ஈரோடு மாவட்டம், அரச்சலூர் பகுதியில் வடிவேல் என்பவர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நிலையில், அவரை முன்னாள் திமுக கவுன்சிலர் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில் தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கு கூட தயக்கம் காட்டுகின்ற நிலை உருவாகியுள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக ஈரோடு மாவட்டம், அச்சலூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவர் திமுக கிளைச்செயலாளராக இருந்தார். இதனிடையே நேற்று (டிசம்பர் 30) பாஜக மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி முன்னிலையில் பாஜகவில் இணைந்த நிலையில், அவரை திமுகவின் முன்னாள் கவுன்சிலர் ஒருவர் வடிவேலுலை அடித்துக் கொலை செய்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில்: ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்தவர் சகோதரர் வடிவேல் அவர்கள் நேற்று பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். திமுகவின் கிளைச்செயலாளராக இருந்தவர். நேற்று இரவு அதே பகுதியின் திமுகவின் முன்னாள் கவுன்சிலர் ஒருவரால் அடித்துக்கொல்லப்பட்டு இருக்கிறார்.


ஒரு பக்கம் மாநிலத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவருடைய கட்சிக்காக உறுப்பினர்களை பதிவு செய்கின்றார். இன்னொருபக்கம் இதைப்போன்ற நிகழ்வுகள்! சகோதரர் வடிவேல் அவர்களுடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன். நாங்கள் அவருடைய குடும்பத்தினருடன் துணை இருப்போம். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News