Kathir News
Begin typing your search above and press return to search.

தஞ்சையில் கிடைத்தது திருக்குவளையில் திருடு போன மரகதலிங்கம் - தருமபுர ஆதினம் பரபரப்பு தகவல்!

தஞ்சையில் கிடைத்தது  திருக்குவளையில் திருடு போன மரகதலிங்கம் - தருமபுர ஆதினம் பரபரப்பு தகவல்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  1 Jan 2022 7:00 PM IST

திருக்குவளையில் திருடுபோன மரகத லிங்கத்தை ஒப்படைக்க வேண்டி தருமபுர ஆதினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கடந்த 2016'ம் ஆண்டு திருக்குவளை சிவன் ஆலயத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட மரகதலிங்கம் திருடப்பட்டது. இதனை சிலை தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரிக்கையில் அது தற்பொழுது தஞ்சாவூரில் ஒருவரது வங்கி லாக்கரில் இருப்பது கண்டறியப்பட்டது.


இந்நிலையில் இந்த லிங்கத்தை பற்றி தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பரமாசரிய சுவாமிகள் இந்த லிங்கத்தை பற்றி கூறியதாவது, "தஞ்சையில் கண்டுபிடிக்கப்பட்ட மரகதலிங்கம் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அவனிவிடங்கர் என்று அழைக்கப்படும் திருக்குவளை ஆலயத்தை சேர்ந்த லிங்கமே, இதனை திருக்குவளை ஆலயத்தில் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சிலை தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் பொன்னி, கூடுதல் கண்காணிப்பாளர் ராஜராஜன், அசோக் நடராஜன் ஆகியோர் தருமபுரம் ஆதினத்தை சந்தித்து இதனை உறுதி செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து அரசுக்கு அறிவித்து அதன்படி செயல்படுத்துவதாக அறிவித்துள்ளனர்.



Source - Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News