அழியும் நிலையில் உள்ள காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற சிறுவர்களை கட்சியில் சேர்க்க முடிவு!
By : Mohan Raj
காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற சிறுவர்களை கட்சியில் சேர்க்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியை சமாளிக்கவும், புதிய அளவில் ஆட்களை கட்சிக்குள் அழைத்து வரவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருகிறது. அதன்படி 7 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களை குறிவைத்து ஒரு பிரிவை காங்கிரஸ் கட்சி துவங்கியுள்ளது.
'ஜவர்பால் மஞ்சு' என்ற திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் துவங்கும் படி அனைத்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் இந்த திட்டத்தில் சேர விரும்பும் சிறுவர்கள் 7 முதல் 18 வயதுடையவராக இருக்க வேண்டும், அவர்களுக்கு அரசியல் பயிற்ச்சியளித்து அவர்களை உருவாக்க வேண்டும். இதற்காக உருவாக்கப்படும் இணையதளம் காங்கிரஸ் கட்சியின் இணையதளத்துடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை வீழ்ச்சியின் உச்சிக்கு சென்று கொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவரை கூட தேர்ந்தெடுக்க இயலாத நிலையை கொண்டுள்ளதால் அதனை வளர்ச்சி பாதையை தீர்மானிக்க சிறுவர்களை கட்யில் இணைக்க இந்த திட்டம் மூலம் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.