எங்களுக்கு எல்லா கலர்களும் முக்கியம் - ஆ.ராசா'விற்கு அண்ணாமலை பதிலடி!
By : Mohan Raj
கருப்பு, சிவப்புடன் நீலமும் சேர வேண்டும் என தி.மு.க அமைச்சர் ஆ.ராசா கூறியதற்கு "பா.ஜ.க'வாகிய நாங்கள் எந்த கட்சியையும் பிரித்து பார்க்கவில்லை, எங்களுக்கு எல்லா கலர்களும் எங்களுக்கு வேண்டும்" என சமத்துவமாக பதிலடி தரும் விதமாக பேசியுள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணமாலை.
இன்று வீரபாண்டிய கட்டபொம்மனின் 262'வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. பின்னர் செய்தியார்களை சந்தித்த அவர் கூறியதாவது, "வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரம், விவேகம் இளைய சமுதாயத்தினருக்கு உந்து சக்தியாக திகழ்கிறது. பா.ஜ.க சார்பில் சிவகங்கையிலும், பாஞ்சாலங்குறிச்சியிலும் விழா எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் பேசிய அவர் கூறியதாவது, "கருப்பு, சிவப்புடன் நீலமும் சேர வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியிருக்கிறார். அவர் சொன்ன கலர் காமினேஷன் புரியவில்லை. பாரதிய ஜனதா கட்சியை பொருத்தவரை யாரையும் நாங்கள் பிரித்து பார்க்கவில்லை எல்லா கலர்களும் எங்களுக்கு வேண்டும்" என கூறினார்.
மேலும் "காங்கிரஸ் கட்சியின் சரித்திரம் இந்திய அளவில் முடிவுரை எழுதப்பட்டு வருகிறது, இந்திய மக்கள் அனைவரும் பா.ஜ.க பக்கம் இருக்கிறார்கள்" என கூறினார்.