மத்திய அரசின் திட்டத்தை கோலாகலமாக துவங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
By : Mohan Raj
மத்திய அரசின் 15 முதல் 18 வயதினோருக்கான் கொரோனோ தடுப்பூசி போடும் பணியை சென்னையில் துவங்கி வைத்து "தடுப்பூசி போடுவதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கிறோம்" என முதல்வர் ஸ்டாலின் பெருமை பொங்க பேசியுள்ளார்.
இன்று முதல் நாடு முழுவதும் 15 முதல் 18 வயதினோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு துவங்கி வைத்தது. அந்த திட்டம் தமிழகத்தின் பல பகுதிகளில் துவங்கப்பட்டது. இதை சென்னை சைதாப்பேட்டையில் துவங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, "அமெரிக்காவில் தினமும் 5 லட்சம் பேர் புதிய கொரோனோ தொற்றால் பாதிக்கப்படுகின்றனர், ஐரோப்பிய நாடுகளில் புது வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் அந்த அளவிற்கு பாதிப்பு இல்லை என கூறினாலும் தற்பொழுது நோய் தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
மற்ற மாநிலங்களில் புதிய வகை கொரோனோ தொற்று அதிகமாகிக்கொண்டே செல்கிறது, தமிழகத்திலும் அதிகரிக்கும் இந்த புதியவகை கொரோனோ தொற்றை தடுக்க நம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், தமிழக அரசு தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாக மாற்றி வருகிறது" என கூறினார்.
மேலும் பேசி அவர் கூறியதாவது, "அரசு அறிவித்துள்ள கொரோனோ தொற்று நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடித்து கொரோனோ தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்" எனவும் கூறினார்.