பா.ஜ.க - தி.மு.க கூட்டணியா? பொன்னார் கூறியது என்ன?
By : Mohan Raj
தி.மு.க, பா.ஜ.க இடையில் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக 11 மருத்துவ கல்லூரிகளை திறக்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இதனையடுத்து கடந்த ஆண்டு முதல் "கோ பேக் மோடி" என ஆக்ரோஷமாக எதிர்த்து வந்த தி.மு.க தற்பொழுது மோடி வருவது நமக்கு பெருமை என மாறியுள்ளது. மேலும் தமிழகத்தில் நேற்றைய முன்தினம் சிவகங்கையில் பா.ஜ.க மற்றும் தி.மு.க கொடிகள் அருகருகே வரிசையாக நடப்பட்டிருந்தன. மோடியை வரவேற்கும் தி.மு.க'வின் நடவடிக்கையை பார்த்து தமிழகத்தில் பா.ஜ.க, தி.மு.க கூட்டணி அமையும் என பல பேச்சுக்கள் உலாவி வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக பா.ஜ.க'வின் மூத்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, "பிரதமரை வரவேற்று தி.மு.க பேசுவது பாராட்டுக்குறியது, வரவேற்புக்குறியது. பா.ஜ.க, தி.மு.க கூட்டணி அமையுமா என்பதை காலம் தான் பதில் சொல்லும், நாமாக எதையும் முடிவு செய்ய இயலாது. அதேநேரம் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பலமான கூட்டணியாக இருந்து வருகிறோம். வரும் தேர்தலில் பா.ஜ.க வலுவான சக்தியாக எழுந்து நிற்கும்" என கூறினார்.