Kathir News
Begin typing your search above and press return to search.

"நீட் தேவையில்லை" என ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் கூறினாரா? உண்மை என்ன?

நீட் தேவையில்லை என  ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் கூறினாரா? உண்மை என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  5 Jan 2022 10:15 AM GMT

நீட் தேர்வு பற்றி இன்னு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன கூறினார் என்பது விவாத பொருளாக மாறியுள்ளது.

தமிழக சட்டசபை இன்று கூடியது, அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதன்முறையாக உரையாற்றினார். தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு நீட் தேர்வு விவகாரத்தில் கடும் எதிர்ப்பு நிலையை அரசியல் காரணங்களுக்காக கையாண்டு வருகிறது. கடந்த தேர்தலில் நீட் தேர்வு ரத்து சொய்வோம் என வாக்குறுதிகளை கொடுத்தே தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இதில் உள்க சட்ட சிக்கல்களை புரிந்துகொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆளுநரிடம் மனு கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு புதிதாக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி அவர்கள் இன்று சட்டப்பேரவையில் முதல் உரையை ஆற்றினார். அதில் கண்டிப்பாக தமிழக அரசின் நிலைப்பாடான நீட் தேர்வு எதிர்ப்பை பிரதிபலிப்பார் என ஆளும் தி.மு.க அரசு எதிர்பார்த்து வந்தது. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்வு குறித்து இன்று சட்டசபையில் பேசினார்.

அவர் பேசியதாவது, "நீட் போன்ற தேர்வுகள் தேவையற்றது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம், இது போன்ற தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சமமற்ற தளத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன, எனவே தொழில் படிப்புகளில் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் தேவையற்றது என்ற இந்த அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம்" என்றார். அதாவது தமிழகத்தின் ஆளுநர் தமிழகத்தின் ஆளும் அரசாக இருக்கக்கூடிய ஸ்டாலின் தலைமையிலான அரசு நீட் தேர்வு வேண்டாம் என்கிற நிலைப்பாட்டை தமிழகம் சார்பாக வலியுறுத்துவோம் என கூறினாரே தவிர "நீட் வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது" என ஆளுநர் கூறவில்லை. இதனை ஆளும் தரப்பு ஆளுநர் "நீட் தேவையில்லை என கூறினார்" என ஆளும்கட்சியின் சார்பு ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றன.


Source - ASIANET News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News