தி.மு.க எம்.எல்.ஏ'க்களே அமைதியாக அமர்ந்திருக்க வெளிநடப்பு செய்த வி.சி.க எம்.எல்.ஏ'க்கள் - சட்டசபை கலாட்டா!
By : Mohan Raj
நீட் தேர்வு விலக்கு வாங்குவோம் என வாக்குறுதிகள் அளித்த தி.மு.க எம்.எல்.ஏ'க்களே ஆளுநர் உரைக்கு அமர்ந்திருக்க கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ'க்கள் ஆளுநர் நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என வெளிநடப்பு செய்தது இன்றைய சட்டசபையில் வேடிக்கையாக இருந்தது.
அந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது சட்டசபை. தமிழக ஆளுநராக பெறுப்பேற்று முதல் உரை ஆற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்நிலையில் ஆளுநர் ஆர் என்.ரவி உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ'க்களும் 'நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை' என கூறி வெளிநடப்பு செய்தனர்.
நீட் தேர்வு விலக்கு என வாக்குறுதிகளை அள்ளி கொடுத்து வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற தி.மு.க எம்.எல்.ஏ'க்களே அமைதியாக அமர்ந்திருக்க கூட்டணி கட்சி வைத்து வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ'க்கள் நீட் தேர்வு விலக்கு பற்றிய மசோதா'வை காரணம் காட்டி வெளிநடப்பு செய்தது சட்டசபையில் விமர்சனங்களை ஏற்படுத்தியது.