"நம்ம முதல்வருக்கு கொஞ்சமாச்சும் மரியாதை கொடுங்கப்பா" - தி.மு.க எம்.எல்.ஏ'க்களிடம் கடிந்து கொண்ட எ.வ.வேலு
By : Mohan Raj
முதல்வர் ஸ்டாலினுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுங்கப்பா என தி.மு.க எம்.எல்.ஏ'க்களுக்கு மூத்த அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த வாரம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏ'க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டசபையில் எம்.எல்.ஏ'க்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. அதில் சில அறிவுரைகளும் வழங்கப்பட்டது.
அந்த கூட்டத்தில் பேசிய தி.மு.க அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, "என் மனசில் நீண்ட நாட்களாக ஒரு குறை இருக்கிறது. அதை நான் சொல்லியே ஆக வேண்டும், ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது அ.தி.மு.க எம்.எல்.ஏ'க்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என இங்கே இருக்கும் அனைவருக்கும் தெரியும். உடல் உபாதைகள் இருந்தாலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ'க்கள் அசையாமல் அப்படியே உட்காந்திருப்பார்கள் எங்கேயும் நகர மாட்டார்கள்.
ஆனால் நம் முதல்வர் அமர்ந்திருக்கும் போது அப்படியா இருக்குறீர்கள்? அங்கே, இங்கே எழுந்து செல்கிறீர்கள், வருகின்றனர், போகின்றனர். சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்த செயல் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் இருக்கிறது. இப்படி இருப்பது சரியில்லை" என கூறியுள்ளார் மூத்த அமைச்சர் எ.வ.வேலு. அனைத்து தி.மு.க எம்.எல்.ஏ'க்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.