மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்தில் பேரணி சென்ற காங்கிரஸ் - கொந்தளிப்பில் தமிழக விவசாயிகள்
By : Mohan Raj
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினர் தமிழக விவசாயிகளுக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்ட பேரணி கிளம்பிய விவகாரம் தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தி.மு.க'வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பது போல காங்கிரஸ் நாடகமாடினாலும் கர்நாடகத்தில் தமிழக விவசாயிகளுக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்ம போராட்டத்தில் இறங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சியின் இந்த நாடகம் தமிழக விவசாயிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.
மனுவை பற்றி குறிப்பிட்ட பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது, "கர்நாடக அரசு காவிரி குறுக்கே அணைகட்ட வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் தமிழக விவசாயிகளுக்கு வஞ்சிக்கும் வகையிலும் கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கிலும் நேற்று பேரணி துவங்கியதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதனை மத்திய அரசும், தமிழக அரசு தடுத்திட முன்வர வேண்டும். இதில் கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் பின்வாங்கவில்லை என்றால் வரும் 18'ம் தேதி திருவாரூரில் துவங்கி 19'ம் தேதி மேகதாதுவில் முற்றுகையிட அனுமதி கேட்டு முதல்வரிடம் விண்ணப்பித்துள்ளோம்" என கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் இந்த இரட்டை வேடம் தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.