Kathir News
Begin typing your search above and press return to search.

ஐந்து மாநில தேர்தல் தேதிகள் அறிவித்தபோதும் இத்தாலி இன்ப சுற்றுலாவில் இருந்து திரும்பாத ராகுல்காந்தி - தோல்வி பயமா?

ஐந்து மாநில தேர்தல் தேதிகள் அறிவித்தபோதும் இத்தாலி இன்ப சுற்றுலாவில் இருந்து திரும்பாத ராகுல்காந்தி - தோல்வி பயமா?

Mohan RajBy : Mohan Raj

  |  14 Jan 2022 1:01 AM GMT

ஐந்து மாநில தேர்தல்களை அறிவித்துள்ள நிலையில் ராகுல் காந்தி இன்னும் வெளிநாட்டு சுற்றுலாவில் இருந்து நாடு திரும்பாதது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இது காங்கிரஸின் தோல்வி பயத்தையே காட்டுகிறது எனவும பரவலாக பேச்சு அடிபடுகிறது.



வரும் பிப்ரவரி மாதம் உத்திரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உத்ரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிப்ரவரி 10'ம் தேதி முதல் துவங்கும் தேர்தலுக்கு மார்ச் மாதம் 7'ம் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 27'ம் தேதி இத்தாலிக்கு இன்ப சுற்றுலா சென்ற காங்கிரஸ் கட்சின் இளவரசர் ராகுல்காந்தி மற்ற கட்சிகள் பரபரப்பாக தேர்தல் வேலைகளில் இயங்கும் நேரத்தில் இன்பசுற்றுலாவில் இருந்து திரும்ப மனம் இல்லாமல் இருப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில இடங்களில் வேட்பாளர்களை பிரியங்கா காந்தியே அறிமுகப்படுத்தியுள்ளது இந்த ஐந்து மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இல்லாதது போல் காட்டுகிறது.

கிட்டத்தட்ட அழியும் நிலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் பிரநிநிதிகள் இந்த ஐந்து மாநில தேர்தல்களை காங்கிரஸ் கட்சியின் வாழ்வா, சாவா என்ற நிலையில் பார்க்கும்போது காங்கிரஸ் கட்சியின் இளவரசர் இன்ப சுற்றுலாவில் இருப்பதும், பிரச்சாரத்திற்கான திட்டமிடல், வாக்குறுதிகள் போன்றவற்றில் அறிவிப்பு ஏதும் இல்லாமல் இருப்பதும் கட்சியை கரை சேர்க்குமா அல்லது காங்கிரஸின் தலைமைக்கே இந்ந ஐந்த மாநில நேர்தல்களில் நம்பிக்கை இல்லையான என்பது போன்ற பேச்சுக்கள் அடிபட துவங்கியுள்ளன.



இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினருக்கு தலைமை கூறும் பதில்கள் அவர்களை சமாதானப்படுத்துவதாகவே இருக்கின்றன. உலகம் முழுவதும் கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்ட காரணத்தினால் ராகுல் வர இயலவில்லை எனவும், அவர் விரைவில் இந்தியா திரும்பி பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனவும் தலைமை சார்பாக கூறப்பட்டாலும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் கட்சியினருக்கு குறைந்தபட்ச நம்பிக்கை அளிக்க வேண்டியாவது ராகுல் காந்தி வர வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் கருதுகின்றனர், ராகுலுக்கு அந்ந நம்பிக்கை இல்லை போலும்!


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News