Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரை எய்ம்ஸ் குறித்து எல்.முருகன் கூறிய அட்டகாசமான அப்டேட்

மதுரை எய்ம்ஸ் குறித்து எல்.முருகன் கூறிய அட்டகாசமான அப்டேட்

Mohan RajBy : Mohan Raj

  |  14 Jan 2022 1:00 AM GMT

"எல்லாவற்றிற்கும் ஒரு கால வரம்பு இருக்கிறது, அந்த காலகட்டத்தில் அந்தந்த பணிகள் சிறப்பாக முடியும். இது பிரதமரே துவங்கி வைத்த திட்டம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்" என மதுரை எய்ம்ஸ் குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.



மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது எய்ம்ஸ் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது, "இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் இல்லாத சிறப்பு தமிழகத்திற்கு பிரதமர் மோடியால் கிடைத்துள்ளது. ஒரே நாளில் 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி தமிழகத்திற்கு அற்பணித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் சிறப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. சிலர் பணிகள் நடப்பதில்லை என கூறுகின்றனர். எல்லாவற்றிற்கும் காலவரம்பு இருக்கிறது, அந்த காலகட்டத்தில் அந்த பணிகள் சிறப்பாக முடியும்.



மதுரை எய்ம்ஸ் பணிகள் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது, அதற்கான முதற்கட்ட நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடியே துவங்கி வைத்த திட்டம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை கண்டிப்பாக வரும் அதில் தமிழக மக்கள் அனைவரும் சிறப்பான சிகிச்சை பெறுவார்கள்" என ஆணித்தரமாக கூறினார்.



Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News