நடிகர் சித்தார்த் கைதா? போலீஸ் கமிஷனர் கூறிய பதில் என்ன?
By : Mohan Raj
நடிகர் சித்தார்த் மீதான ஆபாசமாக பேசிய புகார் தொடர்பாக விசாரணை துவங்கிவிட்டதாக காவல்துறை கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளார்.
நடிகர் சித்தார்த் வழக்கம்போல் ட்விட்டரில் கருத்து கூறுகிறேன் என்ற பெயரில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டர் பதிவிற்கு ஆபாசமாக பதிலளித்தார். இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் கையில் எடுத்தது. பொதுவெளியாகிய சமூக வலைதளத்தில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சாய்னா நேவாலை அவதூறாக பேசியதாக கண்டனம் தெரிவித்ததுடன், காவல்துறையிடம் புகார் அளித்தது. புகாரின் அடிப்படையில் நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என பெண்கள் தரப்பில் எதிர்பார்த்ததற்கு பதிலளிக்கும் விதமாக காவல் துறை கமிஷனர் பதிலளித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காவல் துறை கமிஷனர் சங்கர்ஜிவால் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு கூறியதாவது, "நடிகர் சித்தார்த் மீது பாட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் ஒரு பெண் செய்தி வாசிப்பாளர் புகார் என இரண்டு புகார்கள் உள்ளன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையத்திடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அதுபற்றி விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவங்கிவிட்டனர், சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் பட்சத்தில் அவருக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை செய்யப்படும்" என அவர் தெரிவித்தார்.