"இப்ப எனக்கு என்ன குறைச்சல்?" - செய்தியாளர்களிடம் சீறிய உதயநிதி
By : Mohan Raj
"இதை ஏன் என்கிட்ட கேட்குறீங்க?" என தி.மு.க'வின் பட்டத்து இளவரசர் உதயநிதி செய்தியாளர்களிடம் சீறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கலுக்கு பிறகு தி.மு.க அரசின் அமைச்சரவை மாற்றியமைக்கப்படுகிறது, அப்படி மாறும் அமைச்சரவையில் உதயநிதி அமைச்சராவார் என பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில் அதுபற்றி அறிவிப்புகள் ஏதும் வரலாம் என உதயநிதி தீவிர ஆதரவாளர்கள் கடும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் தி.மு.க சார்பில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பொங்கல் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த உதயநிதி சில பதில்களுக்கு கோபமடைந்தார். முதலில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி கூறியதாவது, "என்னுடைய தமிழர் திருநாள் வாழ்த்துகள், தை பிறந்துள்ளது அரசியல் பணி, திரையுலகில் இலக்கு உள்ளதா? என கேட்கிறீர்கள் அப்படி எனக்கு ஏதும் இலக்கு இல்லை! என் வேலையை நான் பார்த்துக்கொண்டு இருக்கேன், தி.மு.க தலைவர் ஸ்டாலின் சொல்வதை கேட்டுக்கொண்டு செய்து கொண்டு இருக்கிறேன்" என்றார்.
பின்னர் செய்தியாளர்கள், "தை பிறந்தார் வழி பிறக்கும், உங்களுக்கு வழி பிறக்குமா?" என உதயநிதி அமைச்சர் ஆவது குறித்து சூசகமாக கேட்டனர். உடனே உதயநிதி கோபமாக, "ஏன் ஏற்கனவே எனக்கு நல்ல வழிதானே இருக்கிறது, ஏற்கனவே எனக்கு நல்ல வழிதானே இருக்கு" என கேட்க மொத்த செய்தியாளர்கள் கூட்டமும் கப்சிப் என ஆகிவிட்டது.
உதயநிதி அமைச்சர் ஆவார் என அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க அவரோ அது பற்றிய கேள்விக்கு கோபமான பதிலை தந்திருப்பது உதயநிதி ஆதரவாளர்களை சந்தேகப்பட வைத்துள்ளது.