Kathir News
Begin typing your search above and press return to search.

போலீஸ் எஸ்.ஐ'யை 'சப்'பென்று 'அப்பிய' தி.மு.க பிரமுகர்கள் - சென்னையில் அட்டூழியம்

போலீஸ் எஸ்.ஐயை சப்பென்று அப்பிய தி.மு.க பிரமுகர்கள் - சென்னையில் அட்டூழியம்

Mohan RajBy : Mohan Raj

  |  18 Jan 2022 11:15 AM GMT

போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்னிலையிலேயே சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை காவலர் மீது தி.மு.க'வினர் தாக்குதல் நடத்திய சம்பவம் எண்ணூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ரவுடியிசம் அதிகமாக தலைதூக்கியுள்ளது. அது அதிகரித்து! அதிகரித்து தற்பொழுது காவல்துறை உதவி ஆய்வாளரை அடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. அந்த வகையில் சென்னை திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் 1'வது வட்டத்தில் நேற்றுமுன்தினம் தி.மு.க'வினர் சிலர் மதுபோதையில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர், அப்பொழுது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதால் அந்த பகுதியே போர்க்களம் போல் காணப்பட்டது. இது குறித்து தகவலறிந்த எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிளாஸ்டின் டேவிட் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது அங்கிருந்த 1'வது வட்டத்தை சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் அனிஷ், கிஷார் ஆகியோர் மதுபோதையில் பொதுமக்களை தாக்கினர். இதனை தட்டிக் கேட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் ஆகி யோரையும் இன்ஸ்பெக்டர் முன்னிலையிலேயே தாக்கத் தொடங்கினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர், 'சப்-இன்ஸ்பெக்டரை அடிக் கிறாங்க' என்று கூறியவாறே அங்கிருந்த போலீசாரை அழைத்தார். அப்போது மீண்டும் அனீஸ், கிஷோர் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை காவலரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி சட்டையை இழுத்து அடித்தனர். இத னால் பயத்தில் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி அடித்து ஓடினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்ஸ்பெக்டர் முன்னி லையிலேயே சப்-இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் மீது தி.மு.க'வினர் தாக்குதல் நடத்திய சம்பவம் எண்ணூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Source -




Next Story
கதிர் தொகுப்பு
Trending News