வெல்லம் உருகுறத டெஸ்லா எலன் மஸ்க்'தான் வந்து கண்டுபிடிக்கனும் - தி.மு.க'வை கலாய்த்த அண்ணாமலை
By : Mohan Raj
"வெல்லம் உருகுவதற்கு டெஸ்லா தலைவர் எலன் மஸ்க்'கை தான் கூட்டிட்டு வந்து விசாரிக்கனும்"ன்னு தி.மு.க'வினரை கலாய்த்துள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.
சமீபத்தில் தி.மு.க அரசு வழங்கிய பொங்கல் பரிசு பொருள்களில் தரமற்ற் பொருள்கள் இருந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக அதில் வழங்கப்படும் வெல்லம் மக்கள் பயன்படுத்த முடியாத அளவு மோசமான நிலையில் இருப்பதால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். அதிலும் வெல்லம் கெட்டியாக இல்லாமல் உருகி வழிந்தோடும் நிலையில் இருப்பதை பெரும்பாலான மக்கள் வாழ்நாளில் இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க சார்பில் பொங்கல் விழா கோவையில் 'நம்ம ஊரு மோடி பொங்கல் விழா' நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க தலைவர் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, "மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் வெல்லம் உருகும் என்கின்றனர். விஞ்சானப்பூர்வமான ஊழலுக்கு ஒரு விஞ்ஞானபூர்வமான பதில்தான் கூறுவார்கள். இது தொடர்பாக டெஸ்லா தலைவர் எலன் மஸ்க் கூட்டி வந்து கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும்" என்றார்.
மேலும் பேசிய அவர், "நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட அனைத்தையும் அறிவித்துவிட்டு இப்பொழுது எஸ்கேப் ஆகிவிட்டார் உதயநிதி ஸ்டாலின்" என்றார் அண்ணாமலை.