நிர்வாகிகளுக்கு பந்தி பரிமாறிய ஆளுநர் - இதுதான் ஆட்சி, அதிகார பலம் பார்க்காத ரியல் பா.ஜ.க ஸ்டைல்
By : Mohan Raj
ஆளுநராக பதவி வகிக்கும் தமிழிசை சவுந்தர்ராஜன் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுக்கு சாப்பிட பந்தி பரிமாறிய நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அடிமட்ட தொண்டனும் உயரலாம், உயர்ந்தாலும் அவர் அடுத்த அடிமட்ட தொண்டரிடத்தில் பண்பாகவும், மரியாதையாகவும் நடக்கலாம் என்பது பா.ஜ.க'வில் மட்டுமே சாத்தியம் என்பது உலகறிந்த உண்மை. இதனை அடிக்கடி உணர்த்தும் வகையில் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் ஆளுநர் மதிப்பில் இருக்கும் தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்கள் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுக்கு சாப்பாட்டு பந்தி பரிமாறியது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது மட்டுமின்றி நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மகன் கோவை அவிநாசி சாலையிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை மற்றும் பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற பா.ஜ.க நிர்வாகிகளுக்கு பந்தியில் உணவு பரிமாறி ஆச்சர்யப்பட வைத்துள்ளார் தமிழிசை. இதுகுறித்து பா.ஜ.க விவசாய அணித்தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறுகையில், "அண்ணாமலை, நான், காந்தி ஆகியோர் மணமக்களை வாழ்த்திவிட்டு கீழே இறங்கினோம். பின்னர் உணவருந்த செல்லும் போது தமிழிசையும் இருந்தார். பின்னர் சாப்பிட அமருகையில் தமிழிசை உடனே அனைவருக்கும் பரிமாற துவங்கிவிட்டார். இதுகுறித்து அவர், "கட்சியின் உண்மையான உழைப்பாளி, உங்களுக்குப் பரிமாறுவதில் பெருமை" என பெருமை பொங்க கூறினார் என்றார். இது வாரிசு அரசியல், குடும்ப அரசியல், பண்ணையார் அரசியல் என பார்த்து பழங்கப்பட்ட தமிழகத்திற்கு புதிது என பரவலாக பேசப்படுகிறது.