மதமாற்ற கொடுமையால் சிறுமி இறந்த கொடுமை இனியும் நிகழாமல் குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும் - ஜி.கே.வாசன் எம்.பி
By : Mohan Raj
தஞ்சையில் மதமாற்றம் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த மாணவி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு உடன டியாக தண்டனை வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் எம்.பி. கூறினார்.
தஞ்சையை அடுத்த திருவையாறில் நடந்து வரும் தியாகராஜர் ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தஞ்சை அருகே உள்ள ஒரு பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவிக்கு நடந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. வருத்தத்துக்குரியது. சிறுமிக்கு நடந்த சம்பவம் அவரது வருங் காலத்தை இருளாக்கியதோடு மட்டுமின்றி, வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது.
இதுபோன்ற நிலை இனி மேல் எப்போதும், எங்கேயும் ஏற்படக்கூடாது. உண்மை நிலையை விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும். அது மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும். அரசு இதில் இன்னும் அதிக கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.
Source - தினத்தந்தி