'ராமர் கோவில் இயக்கத்திற்காக நீங்க பேச்சு மட்டுமே! நாங்கள் தடியடி தோட்டாக்களை எதிர்கொண்டோம்' - தேவேந்திர பட்னவிஸ் பதிலடி
By : Mohan Raj
"ராமர் கோவில் இயக்கத்தின் போது நீங்கள் பேச்சு மட்டுமே கொடுத்தீர்கள், நாங்கள் தோட்டாக்களையும், தடியடிகளையும் எதிர்கொண்டோம்" என உத்தவ் தாக்கரே'வுக்கு பா.ஜ.க மூத்த தலைவர் தேவேந்திர பட்னவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் சூடுபிடித்துள்ள வேளையில் மஹாராஸ்டிரா மாநிலத்தில் பெரும் புயலை கிளம்பியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது சிவசேனா கட்சியின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, "பா.ஜ.க'வுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகள் வீணடித்து விட்டோம்" என கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக மகாராஷ்டிரா மாநில எதிர்கட்சி தலைவரும், பா.ஜ.க'வின் மூத்த தலைவருமாகிய தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது, "மும்பையில் பா.ஜ.க இருந்த நேரத்தில் சிவசேனா உதயமாகவில்லை என்பதை அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். எங்களுடன் கூட்டணியில் இருந்தபொழுது சிவசேனா நம்பர் 1 அல்லது நம்பர் 2 கட்சியாக இருந்தது தற்பொழுது அவர்கள் 4 வது இடத்தில் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் சோனியா, ராகுல் ஆகியோர் பால் தாக்கரே'வுக்காக சமூக வலைதளத்தில் பதிவிடுவார்களா? என நான் சிவசேனா கட்சியினருக்கு சவால் விடுகிறேன். ராமர் கோவில் இயக்கத்தின் போது நீங்கள் பேச்சு மட்டுமே கொடுத்தீர்கள், நாங்கள் தோட்டாக்களையும், தடியடிகளையும் எதிர்கொண்டோம்" என பதிலடி தரும் விதமாக பேசியுள்ளார்.