'ஆரம்பத்துல இருந்தே வழக்க திசை திருப்பத்தான் பார்க்குறாங்க' - சீறும் அண்ணாமலை
By : Mohan Raj
தஞ்சையில் மததாற்ற கொடுமையால் சிறுமி தற்கொலை செய்துகொண்ட வழக்கை ஆரம்பத்தில் இருந்து மூடி மறைக்கவும், திசை திருப்பவும்தான் முயற்சி நடக்கிறது' என அண்ணாமலை உண்ணாவிரத போராட்டத்தில் கூறியுள்ளார்.
தஞ்சையில் தான் படிக்கும் கிருஸ்துவ பள்ளியில் மத மாற சொல்லி சிறுமை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் மனமுடைந்து 17 வயது தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இந்த விவகாரத்தில் இறந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்கவேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் ஆறுதலாவது கிடைக்க வேண்டும் எனவும் தமிழக பா.ஜ.க அண்ணாமலை தலைமையில் ஒரு வாரமாக போராடி வருகிறது. இதன் நீட்சியாக சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் இன்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் மாபெறும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
அதில் ஆயிரக்கணக்கில் பா.ஜ.க'வினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அதில் பேசிய அண்ணாமலை கூறியதாவது, "மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டது கட்டாய மதமாற்றத்தினாலேயே என்பது அந்த மாணவியின் மரண வாக்குமூலத்தின் வீடியோவில் இருந்தே தெரிகிறது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே வழக்கில் விசாரணை முறையாக நடக்கவில்லை.
எனவேதான் தொடர்ந்து போராடுகிறோம். அரசிடம் இருந்து நியாயம் கிடைக்க போராடுவதை தவிர வேறு வழியில்லை. நாங்கள் இந்த போராட்டம் வாயிலாக அரசிடம் வைப்பது 5 கோரிக்கைகளை, ஒன்று லாவண்யா வழக்கை பொறுத்தவரை கட்டாய மதமாற்றம் நடைபெற முயற்சிகள் நடந்திருக்கிறது, எனவே தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வரவேண்டும். பாதிக்கப்பட்ட லாவண்யா குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அந்ந குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்து மூடி மறைக்கவும், திசை திருப்பவும்தான் முயற்சி நடக்கிறது எனவே சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்' என தெரிவித்தார்.