Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு ஊழியர்களுக்கு தி.மு.க நல்லா 'அல்வா' கொடுத்திருக்கு - செல்லூர் ராஜூ பளிச்!

அரசு ஊழியர்களுக்கு தி.மு.க நல்லா அல்வா கொடுத்திருக்கு - செல்லூர் ராஜூ பளிச்!

Mohan RajBy : Mohan Raj

  |  26 Jan 2022 12:30 PM GMT

"தி.மு.க அரசு ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் அல்வா கொடுத்துள்ளது" என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, " உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை நாங்கள் தயாராக இருக்கிறோம், தேர்தலை பொறுத்த வரையில் மக்கள்தான் எஜமானர்கள், மக்கள்தான் நீதிமான்கள்.

இந்த தி.மு.க அரசு வாக்களித்த மக்களுக்கு மட்டும் அல்வா கொடுக்கவில்லை அரசு ஊழியர்களுக்கும் அல்வா கொடுத்துள்ளது என்பதை தெரிந்துகொண்டேன்.

அல்வா கொடுக்கும் போராட்டம் நடத்தியிருக்கிறது இதன் பிரதிபலிப்பு நிச்சயமாக உள்ளாட்சி தேர்தலில் இருக்கும். தரமற்ற பொங்கல் பரிசுப்பொருள்கள் வழங்கும் நிறுவனங்களை கருப்பு பட்டியலில் வைப்பதால் மக்களுக்கு என்ன பயன்? சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.


Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News