Kathir News
Begin typing your search above and press return to search.

"இன்னமும் முதல்வர் ஸ்டாலின் வாய்மூடி அமைதி காப்பது ஏன்?" தஞ்சை சிறுமி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி

இன்னமும் முதல்வர் ஸ்டாலின் வாய்மூடி அமைதி காப்பது ஏன்? தஞ்சை சிறுமி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி

Mohan RajBy : Mohan Raj

  |  28 Jan 2022 9:00 AM GMT

"தஞ்சையில் மதமாற்ற கொடுமையால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சிறுமியின் விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?" என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.


தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல் பட்டியில் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவியை மதம் மாறச் சொல்லி பள்ளி நிர்வாகம் கொடுமை படுத்தியதால் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இந்த விவகாரம் அகில இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த விவகாரத்தில் இருந்து சிறுமிக்கு நியாயம் கிடைக்க பா.ஜ.க சார்பில் நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது


இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது, "தஞ்சாவூரில் பள்ளி நிர்வாகத்தால் கட்டாய மத மாற கொடுமைப்படுத்தியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்திரரே எம்.பி, தெலுங்கானாவை சேர்ந்த விஜயசாந்தி, மகாராஷ்டிராவை சேர்ந்த சித்ரா தாய் வாக்கு, கர்நாடகாவைச் சேர்ந்த கீதா விவேகானந்தா ஆகியோர் அடங்கிய குழுவை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா அமைத்துள்ளார். அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாணவியின் வழக்கை சி.பி.ஐ'க்கு மாற்ற வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் ஏன் முதல்வர் ஸ்டாலின் அமைதியாக உள்ளார்?" எனவும் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.



Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News