Kathir News
Begin typing your search above and press return to search.

"காலம் காலமாக இப்படித்தான் வரலாற்றை திரிப்பதையே வேலையாக வைத்துள்ளீர்கள்" - ஸ்டாலினை கண்டிக்கும் அண்ணாமலை

காலம் காலமாக இப்படித்தான் வரலாற்றை திரிப்பதையே வேலையாக வைத்துள்ளீர்கள் - ஸ்டாலினை கண்டிக்கும் அண்ணாமலை

Mohan RajBy : Mohan Raj

  |  28 Jan 2022 9:00 AM GMT

"குடியரசு தின ஊர்தி விவகாரத்தில் மத்திய அரசு நிராகரித்துவிட்டது" என மீண்டும் மீண்டும் மலிவுவிலை அரசியலை செய்வது தி.மு.க'விற்கு அழகல்ல' என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


கடந்த குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் ஊர்திகளை மத்திய அரசு புறக்கணிப்பதாக தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு செய்திகளை பரப்பி வந்தது இது தொடர்பாக 'ஒரே நாடு' என்ற பத்திரிகையில் அண்ணாமலை அவர்கள் கட்டுரை எழுதியுள்ளார் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும் ஊர்தி தமிழகம் ஊட்டி இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியானது இதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் ஆனால் அரசின் குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றபோது வாகனங்கள் ஏன் நிராகரிக்கப்படது என்ற குட்டு வெளிப்பட்டு விட்டது. தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் கூட குடியரசு தின பேரணியில் தமிழக ஒரு இடம்பெறாதது இருந்தது உண்டு.

நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரை உள்ள நடைமுறை என்னவென்றால் ஒவ்வொரு வருடமும் அனைத்து மாநிலங்களும் இந்த பேரணியில் கலந்துகொள்ள தங்கள் மாதிரி ஊர்களை விண்ணப்பிக்கும், பல்வேறு மாநிலங்களில் ஊர்திகளில் சிறப்பானவற்றை பாதுகாப்புத்துறை தேர்ந்தெடுத்து ஊர்வலத்தில் பங்கு பெற செய்யும், இக்குழுவானது முதலில் வடிவமைப்பு ஆய்வு செய்து அதில் எந்தெந்த மாநிலங்கள் சிறப்பான மாதிரியை வடிவமைத்து முன்வைத்தது அந்த மாநிலங்களில் ஊர்தி அந்த வருட அணிவகுப்பில் இடம்பெற தேர்வாகும் என்பதே நடைமுறை

அந்த வகையில் இந்த வருடம் தமிழகம் சரியான முறையில் நம் மாநில ஊர்திகளை காட்சிப்படுத்தப் தவறிவிட்டது தமிழக அரசின் அதிகாரிகள் கேட்கப்பட்ட திருத்தங்களை அனுப்பி வைக்காமல் திருத்தப்பட்ட மாதிரி ஒப்புதல் பெறாமல் காலமெல்லாம் கிடத்திவிட்டு தங்கள் தவறை மறைக்க மத்திய அரசின் மேல் குறை கூறுகின்றனர், இதற்கு ராஜ்நாத்சிங் விளக்க கடிதம் கொடுத்தும் நான் ஒரு காணொளி காட்சியில் விளக்கிக் கூறியும் தமிழக முதல்வர் நடைமுறை தெரியாதது போல் இருந்து வருகிறார்.


நான் முன்னர் என் கடிதத்தில் சொன்னது போல் வரலாற்றுப் பிழைகளை திட்டமிட்டு தி.மு.க அரசு செய்து வருகிறது வரலாற்று உண்மைகளை காலம் காலமாக சிதைத்து வருகிறது இல்லாத ஒன்றை இருப்பதாகவும் கற்பனையில் புனையப்படும் வரலாற்றுப் பிழைகளை பரப்ப முயற்சிக்கும் தி.மு.க'விற்கு தமிழர்கள் சார்பாக நாம் அனைவரும் ஒரே குரலில் கண்டனங்களை தெரிவிப்போம்" என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.



Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News