Kathir News
Begin typing your search above and press return to search.

"தமிழர் கலாச்சாரம் மீட்டெடுப்பு" பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் நாமக்கல்லில் ஜல்லிக்கட்டு விழா!

தமிழர் கலாச்சாரம் மீட்டெடுப்பு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் நாமக்கல்லில் ஜல்லிக்கட்டு விழா!

Mohan RajBy : Mohan Raj

  |  28 Jan 2022 9:00 AM GMT

தமிழக பா.ஜ.க சார்பில் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் மீட்டெடுப்பு விழாவாக ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் நடத்தப்பட உள்ளது.


கடந்த தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு, இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என மாபெரும் போராட்டங்கள் எழுந்த நிலையில் கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கோரிக்கைகள் பல விடுக்கப்பட்டன இந்த கோரிக்கைகள பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டு தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் மீட்டெடுப்பு நடைபெற வேண்டும் என்பதற்காக ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழகத்தில் நடக்க அனுமதி அளித்தார். இதனை தொடர்ந்து கடந்த நான்காண்டு காலமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டு தமிழக பா.ஜ.க சார்பில் அண்ணாமலை அவர்களின் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் ஐந்துபனை பகுதியில் நடைபெற உள்ளன. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அண்ணாமலை தலைமை தாங்க தெலங்கானா மற்றும் புதுச்சேரியின் ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.






மேலும் பா.ஜ.க'வின் எம்.எல்.ஏ'க்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் மீட்டெடுப்பு விழாவாக ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்த உள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News