Kathir News
Begin typing your search above and press return to search.

உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து இறங்குமுகத்தில் காங்கிரஸ் - வெளியேறும் நிர்வாகிகள்!

உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து இறங்குமுகத்தில் காங்கிரஸ் - வெளியேறும் நிர்வாகிகள்!

Mohan RajBy : Mohan Raj

  |  30 Jan 2022 12:45 PM GMT

தொடர்ந்து வெளியேறும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளால் உத்தரபிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது.

உத்திரப் பிரதேசம், பஞ்சாப் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு பிப்ரவரி 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் உத்திர பிரதேச தேர்தலுக்கு பா.ஜ.க அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. காரணம் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மாபெரும் வெற்றியைப் பெறவேண்டும் என்பதே பா.ஜ.க-வின் இலக்கு.

இந்நிலையில் எதிர்த்து களம் காண வேண்டிய காங்கிரசோ தள்ளாடி நிற்கிறது. அதற்கு காரணம் குறைந்தது 10 முக்கிய பொறுப்பாளர்களாவது காங்கிரஸில் இருந்து இதுவரை வெளியேறி உள்ளனர். அவர்கள் பலர் கட்சியின் குறிப்பிடத்தக்க பொறுப்புகளை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக கட்சியின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்த ஆர்.பி.எம்.சிங் மற்றும் இஸ்லாமியரான இம்ரான் மசூத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். இப்படி முக்கிய நிர்வாகிகள் காங்கிரஸிலிருந்து வெளியேறி வருவது ஏற்கனவே இறங்கு முகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியை அழிவின் பாதைக்கு இழுத்துச் செல்வது போல் உள்ளது.

Source - Asianet NEWSB

Next Story
கதிர் தொகுப்பு
Trending News