உத்திர பிரதேச பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின்? காங்கிரஸுக்கா? அகிலேஷ் யாதவுக்கா?
By : Mohan Raj
உத்தர பிரதேச தேர்தலில் பிரச்சாரத்திற்காக ஸ்டாலின் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்வாரா? அல்லது அகிலேஷ் யாதவுக்கு பிரச்சரம் செய்வாரா என்பது உடன்பிறப்புகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க பல வியூகங்களை வகுத்து வருகிறார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ். அதில் ஒன்றுதான் பிரச்சாரத்திற்கு தி.மு.க தலைவரும், தமிழக முதால்வருமான மு.க.ஸ்டாலினை அழைப்பது. ஆனால், தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உத்திர பிரதேசத்தில் தனித்துப் போட்டியிடுகிறது.
இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் பிரச்சாரத்திற்காக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லும் பொழுது அவர் காங்கிரஸ் கட்சிக்கு செய்வாரா அல்லது சமாஜ்வாடி கட்சிக்கு செல்வாரா என்று தி.மு.க கட்சியினரிடையே குழப்பம் நிலவுவதால் அகிலேஷ் யாதவ் அழைத்தால் என்ன பதில் கூறுவது என தி.மு.க-வினர் அமைதி காத்து வருகின்றனர்.