Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க தொடர் போராட்டத்தின் காரணமாக சி.பி.ஐ'க்கு மாற்றப்பட்ட தஞ்சை சிறுமியின் வழக்கு

பா.ஜ.க தொடர் போராட்டத்தின் காரணமாக சி.பி.ஐக்கு மாற்றப்பட்ட தஞ்சை சிறுமியின் வழக்கு

Mohan RajBy : Mohan Raj

  |  31 Jan 2022 11:30 AM GMT

பா.ஜ.க'வின் தொடர் போராட்டத்தினால் தஞ்சை மாவட்ட மாணவி தற்கொலை வழக்கு சி.பி.ஐ'க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கல் பட்டியல் தூய இருதய மேல்நிலை பள்ளியில் படிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மதமாற்ற கொடுமை நடைபெறுவதாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார், அவரின் இறுதி வாக்குமூலம் வீடியோ பரபரப்பாக வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இந்நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இறந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல போராட்டங்களை நடத்தினார். பின்னர் தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி'க்கு மாற்ற கோரி இறந்த சிறுமியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது, இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.



Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News