"துதிபாடுபவர்களுக்கு விருது வழங்கி தமிழறிஞர்களை அவமதித்த தி.மு.க அரசு" எஸ்.ஆர்.சேகர் கண்டனம்
By : Mohan Raj
"தி.மு.க துதி பாடுபவர்ளுக்கு விருது வழங்கி உண்மையான தமிழறிஞர்களை அனுமதித்துள்ளது தி.மு.க அரசு" என பா.ஜ.க'வின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பா.ஜ.க'வின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "தமிழ் வளர்ச்சித்துறை தமிழை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட துறை ஆனால் தமிழில் அழித்து ஒழிக்கவே தி.மு.க தமிழ் வளர்ச்சித் துறை செயல்படுத்தி வருகிறது இதற்கு சான்று தான் இந்த முறை தமிழ் வளர்ச்சித் துறையில் விருது வழங்கி உண்மையான தமிழறிஞர்களை அனுமதித்துள்ளது தி.மு.க அரசு
அண்ணாதுரை விருது நாஞ்சில் சம்பத்துக்கு வழங்கப்பட்டுள்ளது மேடையில் பேசும் நாகரீகமற்ற பேச்சாளர் அவர் தி.மு.க தலைவர் குடும்பத்தை வாயில் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டி வசைபாடி அவர் முதல்வர் ஸ்டாலின் "ஞானசூனியம்" என பேசியவர் இப்போது அவரை "இந்திரன் சந்திரன்" என புகழ்கின்றனர்.
மாற்று மதத்தை தாஜா செய்ய ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ள நெல்லை கண்ணனுக்கு இளங்கோவடிகள் விருது வழங்கி இளங்கோவடிகளை அவமதித்துள்ளனர் தமிழை அழிக்கும் தி.மு.க'வை உண்மையான தமிழர்கள் தண்டிப்பார்கள்" என அவர் கூறினார்.