Kathir News
Begin typing your search above and press return to search.

வாரிசுக்கு சீட்டு கொடுத்துவிட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததாக விளம்பரப்படுத்தும் காங்கிரஸ் கட்சி

வாரிசுக்கு சீட்டு கொடுத்துவிட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததாக விளம்பரப்படுத்தும் காங்கிரஸ் கட்சி

Mohan RajBy : Mohan Raj

  |  2 Feb 2022 12:00 PM GMT

22 வயது ஆன தீபிகா என்பவருக்கு காங்கிரஸ் கட்சியில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளதாக பிரபலப்படுத்தும் நிலையில் தீபிகாவின் தாய் முன்னாள் திருப்பூர் மேயர் என்பது தெரியவந்துள்ளது.


நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 22 வயது தீபிகா என்பவருக்கு வாய்ப்பளித்த காங்கிரஸ் கட்சி இளைஞர்களுக்கு முன்னுரிமை தருவதாக சமூகவலைதளங்களில் பலமாக பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால், அவற்றின் பின்னணி என்ன என்று பார்க்கும் பொழுது 22 வயது தீபிகா காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி பின்பு சீட்டு வாங்கியவர் இல்லை என்பது தெரியவந்துள்ளது.


இவருடைய தாய் விசாலாட்சி அ.தி.மு.க கட்சியில் திருப்பூர் மாநகரில் மேயராக பதவி வகித்தார் அவரது மகள் தீபிகா தமிழ்நாடு பிரியதர்ஷினி காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசுக்கு சீட்டு வழங்கிவிட்டு அதனை இளைஞர்களுக்கான வாய்ப்பு என காங்கிரஸ் பிரபலப்படுத்த முயற்சிப்பது குறிப்பிடத்தக்கது.



Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News