"தமிழ்நாட்டிலும் பா.ஜ.க ஆட்சி கட்டிலில் அமரும்" - ராகுல் காந்திக்கு சவால் விட்ட அண்ணாமலை!
By : Mohan Raj
புதுச்சேரியை போன்று தமிழ்நாட்டிலும் ஆட்சியை கைப்பற்றுவோம் என ராகுல் காந்திக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நடைபெற்ற பொழுது பேசிய ராகுல் காந்தி 'வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டில் உங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது' என பா.ஜ.க'வை கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது "வரலாற்றை ஒரு போதும் மறக்க வேண்டாம் இலங்கை தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளும் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதற்கு காங்கிரஸே காரணம் என்றார்.
மேலும், "பிரதமர் மோடியின் உன்னத நோக்கத்தை புதுச்சேரி மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் தமிழ்நாட்டு மக்களும் பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடியின் பக்கம் நிற்பதாகவும் விரைவில் தமிழ்நாட்டிலும் பா.ஜ.க ஆட்சிக் கட்டிலில் அமரும்" என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.