Kathir News
Begin typing your search above and press return to search.

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு: தி.மு.க.வை பாடல் மூலம் கலாய்த்த ஜெயக்குமார்!

திமுகவின் பொய் வாக்குறுதிகளை நினைத்தாலே பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்விட்டர் மூலம் கலாய்த்துள்ளார்.

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு: தி.மு.க.வை பாடல் மூலம் கலாய்த்த ஜெயக்குமார்!

ThangaveluBy : Thangavelu

  |  9 Feb 2022 10:07 AM GMT

திமுகவின் பொய் வாக்குறுதிகளை நினைத்தாலே பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்விட்டர் மூலம் கலாய்த்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து கடந்த 9 மாதங்களுக்கு மேலாகிறது. இதனால் இன்னும் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதாக பாஜக, அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இதற்கிடையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை தேர்தல் பிரச்சாரங்களில் அதிமுக கூறி வருகிறது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: திமுகவின் பொய் வாக்குறுதிகளை நினைத்தாலே பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது...

என்னடி மீனாட்சி..!

சொன்னது என்னாச்சு..!

நேற்றோடு நீ சொன்ன வார்த்தை..!

காற்றோடு போயாச்சு..! இவ்வாறு அவர் ட்விட்டர் பதிவில் திமுகவை கலாய்த்துள்ளார்.

Source: Twiter

Image Courtesy: The Economic Times

Next Story
கதிர் தொகுப்பு
Trending News