Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க. அலுவலகம் தாக்கப்படும் போதெல்லாம் தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது: வானதி சீனிவாசன்!

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் சுவர் மற்றும் தரையில் இருந்த டைல்ஸ் கருப்பு நிறமாக மாறியது.

பா.ஜ.க. அலுவலகம் தாக்கப்படும் போதெல்லாம் தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது: வானதி சீனிவாசன்!

ThangaveluBy : Thangavelu

  |  10 Feb 2022 2:15 PM GMT

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் சுவர் மற்றும் தரையில் இருந்த டைல்ஸ் கருப்பு நிறமாக மாறியது.

இரவு நேரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பாஜக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என பாஜக தலைவர் அண்ணாமலையும் கருத்து கூறியுள்ளார்.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழகத்தில் பாஜக அலுவலகம் தாக்கப்படும் போதெல்லாம் திமுக ஆட்சியில் இருக்கிறது. தனிநபர் விருப்பு, வெறுப்பு கோணத்தில் அல்லாமல் கருத்தியல் ரீதியாக எதிராளியை சகித்துக் கொள்ள முடியாத அரசின் மனப்பான்மை என்பதாகத்தான் நேற்றிரவு நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சை பார்க்க முடியும். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Twiter

Image Courtesy: Hindu Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News