Kathir News
Begin typing your search above and press return to search.

"அல்லாஹு அக்பர் என ஏன் கூறவேண்டும்?" திருமாவளவன் மீது சந்தேகம் கிளப்பும் எச்.ராஜா

அல்லாஹு அக்பர் என ஏன் கூறவேண்டும்? திருமாவளவன் மீது சந்தேகம் கிளப்பும் எச்.ராஜா

Mohan RajBy : Mohan Raj

  |  12 Feb 2022 9:15 AM GMT

'திருமாவளவன் ஏன் நாடாளுமன்றத்தில் அல்லாஹு அக்பர் என முழங்கினார்? அவர் மீது சந்தேகம் உள்ளது' என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.


கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் சீருடை அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வந்தது விவகாரமாகியுள்ளது, இதனை இடதுசாரிகள் கையிலெடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்காக நாடு முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கவிருக்கும் வேலையில் தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது இதனால் இந்த விவகாரத்தை கையில் எடுத்து இடதுசாரிகள் அரசியல் லாபம் பார்க்க முயல்கின்றனர்.


இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திருமாவளவன் 'ஜெய் ஸ்ரீராம் என்பது ஹிந்துத்துவா என்றும் ஜெய்பீம் அல்லாஹுஅக்பர் என்பது புரட்சி மொழி' என்றும் பேசினார்.


திருமாவளவனின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இந்த விவகாரத்தில் பா.ஜ.க'வின் மூத்த தலைவர் ஹெச் ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் பொழுது, "ஏன் ஹிஜாப் விவகாரத்தில் திருமாவளவன் நாடாளுமன்றத்தில் அல்லாஹுஅக்பர் என்று குரல் எழுப்ப வேண்டும்? அதில் சந்தேகம் உள்ளது" என்றார். மேலும் "பொருளாதார ரீதியில் அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே பள்ளிக்கூடங்களில் சீருடை பின்பற்றப்படுகிறது, பள்ளிக்கூடத்தில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்ற முடியாதவர்கள் மதரஸாவுக்கு செல்ல வேண்டியதுதானே?" எனவும் அவர் தெரிவித்தார்.


Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News