"மக்களுக்கு வளர்ச்சி, மாபியாக்களுக்கு புல்டோசர்" தேர்தல் பிரச்சாரத்தில் யோகியின் கர்ஜனை
By : Mohan Raj
பா.ஜ.க அரசு மக்களுக்கு வளர்ச்சியையும் மாபியாக்களுக்கு புல்டோசர்'களையும் வைத்துள்ளதாக தேர்தல் பிரச்சாரத்தின்போது உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
ஷாஜகான்பூரில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பேசிய உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறும்பொழுது, "பா.ஜ.க அரசு மக்களுக்காக வளர்ச்சியையும் மறுபுறம் மாபியாகளுக்காக புல்டோசர்களையும் வைத்துள்ளதாக குறிப்பிட்டார், இந்த புல்டோசர்கள் மாபியாக்களை ஓட வைக்க பயன்படுத்துவதாகவும்' அவர் தெரிவித்தார். 'இந்த காரணத்தினால் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர், மேலும் சிறுமிகள் பள்ளிகளுக்கு பத்திரமாக செல்கின்றனர்' என குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர் 'மாநிலத்தில் ராம்லீலாவை முன்பு சரியாக நடத்த முடியவில்லை ஆனால் இப்பொழுது அது மாறிவிட்டது மேலும் குண்டர்களும் மாபியாக்களின் தப்பித்து ஓடுகிறார்கள்' என யோகி ஆதித்யநாத் பெருமை பொங்க கூறினார்.