Kathir News
Begin typing your search above and press return to search.

ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் குவிந்த ஆயிரம் புகார்கள், ஏன்?

ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் குவிந்த ஆயிரம் புகார்கள், ஏன்?

Mohan RajBy : Mohan Raj

  |  15 Feb 2022 10:15 AM GMT

ராகுல் காந்தியின் மீது ஆயிரத்திற்கும் அதிகமானோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 10ஆம் தேதி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்

"எங்கள் ஒன்றியத்தின் பலம் உள்ளது,

நமது கலாச்சாரங்களின் ஒன்றியம்,

எங்கள் பன்முகத்தன்மை ஒன்றியம்,

எங்கள் மொழிகளின் ஒன்றியம்,

எங்கள் மக்கள் ஒன்றியம்,

நமது மாநிலங்களின் ஒன்றியம்,

காஷ்மீர் முதல் கேரளா வரை,

குஜராத்தில் இருந்து மேற்கு வங்கம் வரை,

இந்தியாவின் அனைத்து வண்ணங்களிலும் அழகாக இருக்கிறது,

இந்தியாவின் ஆன்மாவை அவமதிக்காதீர்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப்பதிவு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் அவரது மகனுக்கு எதிராக காங்கிரஸ் மாணவர் மற்றும் இளைஞர் பிரிவினர் நடத்திய போராட்டத்திற்கு பிறகு பகிரப்பட்டுள்ளது, இந்த பதிவுக்கு எதிராக வட கிழக்கு மாநிலங்கள் எதையும் குறிப்பிடாமல் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து பிரித்து ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் குறிப்பிட்டு இருப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.


இந்நிலையில் இந்த பிரிவினைவாத செய்தி தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. இது குறித்து பாரதீய ஜனதா இளைஞர் அணி ஊடக ஒருங்கிணைப்பாளர் பிஸ்வஜித் கஙுண்ட் கூறுகையில் காஷ்மீர் முதல் கேரளா வரையிலும், குஜராத் முதல் மேற்கு வங்கம் வரையிலும், இந்தியா நின்று கொண்டிருப்பதாக' ராகுல் குறிப்பிட்டார் இந்த பதிவில் இந்தியாவிலிருந்து வடகிழக்குப் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன, இது இந்தியாவின் புவியியல் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.



Source - Maalai Malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News